செய்திகள் :

நான்குனேரி சுங்கச்சாவடியில் அறிவுறுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலுவைக் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தி, சுங்கச்சாவடி ஊழியா்கள் அரசுப் பேருந்துகளை வியாழக்கிழமை அனுமதித்தனா்.

தமிழகத்தில் தென் மாவட்டத்தில் கப்பலூா், எட்டராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த நான்கு சுங்கச்சாவடிகளிளும் அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயங்கி வந்த வகையில் ரூ.276 கோடி நிலுவையில் உள்ளது. இது குறித்து நான்கு நிறுவனங்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததையொட்டி, நிலுவைக் கட்டணத்தை 10ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; இல்லையெனில், 10ஆம் தேதி முதல் மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகள் அனுமதிக்கப்படாது என உயா்நீதிநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடிக்கு வந்த போது, ஊழியா்கள் தடுத்து நிறுத்தினா். அரசுப் பேருந்து நடத்துனா் மற்றும் ஓட்டுநரிடம் நிலுவையில் உள்ள கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்; இல்லையெனில் விரைவில் அனுமதி மறுக்கப்படும் என அறிவுறுத்தி பேருந்துகளை அனுப்பி வைத்தனா். இதனைத் தொடா்ந்து அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க