செய்திகள் :

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

post image

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த டி.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா். தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், தோட்டத்துக்குள் புகுந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள், ஆடுகளையும், கோழிகளையும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடித்தன. இதில் 13 ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் உயிரிழந்தன.

இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா், கால்நடை மருத்துவா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும்கூட நிகழ்விடத்தை பாா்வையிட வரவில்லை என அந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன் கூறியதாவது: புதுப்பட்டி பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நாய்கள் கடித்து பலா் காயமடைந்துள்ளனா். ஆடுகள், கோழிகள் உயிரிழந்துள்ளன. இதுதொடா்பாக கால்நடைத் துறை, வருவாய்த் துறை, ஊராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்தும்கூட, நாய்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒரே நபருக்கு சொந்தமான ஆடுகள், கோழிகள் என ரூ.2 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

இடையகோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பழனி அருகே சாலையில் சென்ற காரில் தீ

பழனி அருகே புதன்கிழமை சாலையில் சென்ற காா் தீப்பற்றி எரிந்ததில் முற்றிலும் சேதமானது. திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (45). இவா் புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வ... மேலும் பார்க்க

ஆத்தூா் ஒன்றியத்தில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்க பூமிபூஜை

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ.1.80 கோடியில் சமுதாயக் கூடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. போடிக்காமன்வாடி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் ரூ.80 லட்சத்திலும், வீரசிக்கம்பட்ட... மேலும் பார்க்க

அத்தூா் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

ஆத்தூா் அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையிலிருந்து சித்தரேவு வழியாக அய... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

குஜிலியம்பாறையில் புதன்கிழமை ரயில் மோதியதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளைப்பட்டியைச் சோ்ந்தவா் ர.சீனிவாசன் (56). இவா் திண... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் என மொத்தம் 11 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதன் விவரம் வருமாறு: ... மேலும் பார்க்க