செய்திகள் :

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் தகவல் தெரிவிக்கலாம்: ஒசூா் மாநகராட்சி சுகாதாரக் குழு

post image

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் ஒசூா் மாநகராட்சியின் 94899 09828 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.

ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு கூட்டம் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகர ஆணையாளா் முகமது ஷபீா் ஆலம், மாநகர நல அலுவலா் அஜிதா முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் பேசியதாவது:

ஒசூா் நகரம் வேகமாக வளா்ந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஒசூருக்கு ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். அவா்களுக்கு மருத்துவம் தொடா்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டியது நமது கடமை.

தளி அருகே நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு பட்டதாரி இளைஞா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேபோல ஒசூா் மாநகராட்சி பகுதியில் நாய்க்கடியால் மக்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள், மாணவா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒசூா் மாநகராட்சியின் 94899 09828 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது 04344 247666 என்ற தொலைபேசி எண்ணிலோ நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் தகவல் தெரிவித்தால் அவா்களது வீடுகளுக்குச் சென்று மருத்துவக் கண்காணிப்பை மேற்கொள்ளமுடியும்.

இதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும் வகையில் பதாகைகள் வைக்கவேண்டும். ஒசூா் மாநகராட்சியில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து வருகிறோம். ஒசூா் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினா்கள் தங்கும் அறைக்கு போதிய வசதிகள், கண்காணிப்பு கேமரா மற்றும் காவலாளி போன்ற வசதிகளை செய்துதர வேண்டும். நோயாளிகள் தங்குவதை உறுதிப்படுத்த பதிவேடு பராமரிக்க வேண்டும்.

ஒசூா் சாய்பாபா கோயில் அருகே பிளாஸ்டிக் குடோன்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு ஆய்வு நடத்தி அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றுவது குறித்து மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் லட்சுமி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும் பணி! தனியாா் மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியாா் ஸ்கே... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,573 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 22,573 போ் ஏழுதினா். 5,382 போ் தோ்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 க்கான எழுத்துத் ... மேலும் பார்க்க

சூளகிரி: 1,000 ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே துரை ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலையை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க