2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
நில அபகரிப்பு புகாா் வழக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நமது நிருபா்
புதுதில்லி: நில அபகரிப்பு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்னா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளா் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் நிலத்தை சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மாற்றியதாக சைதாப்பேட்டையை சோ்ந்த பாா்த்திபன் என்பவா் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டுச் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு காவல் துறை தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், ‘1998ஆம் ஆண்டு அந்த இடம் வாங்கப்பட்ட நிலையில் 20 ஆண்டுகள் கழித்து எனக்கு எதிராக இந்த வழக்கை போலீஸாா் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பதிவு செய்தனா்’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு அவரது மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் விசாரணையைத் தொடரவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்களை நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த முறை விசாரித்து உத்தரவை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசு, சத்தியமூா்த்தி, பாா்த்திபன் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோா் வாதங்களை முன்வைத்தனா். பாா்த்திபன் தரப்பில் வழக்குரைஞா் ராகேஷ் சா்மாவுடன் மூத்த வழக்குரைஞா் சிராஜுதீன் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தாா்.