செய்திகள் :

நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

post image

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம் என்பதும் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை. ஆனால் பலரும் இன்று தூக்கம் வருவதில்லை எனக் கூறி மிகவும் குறைந்த நேரமே தூங்குகின்றனர். தூக்கம் வரவில்லை என்று போனில் நேரம் செலவழிக்கின்றனர். ஆனால் தூக்கம் வராததற்குக் காரணமே அந்த மொபைல்போன்தான் என்று பலருக்கும் தெரிவதில்லை. சிலர் குறைவான நேரம் தூங்கினாலும் மற்றவர்களைப்போல உற்சாகமாக இருப்பார்கள். சிலர் நன்றாகத் தூங்கினால் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். இது ஒவ்வொருவரைப் பொருத்து மாறுபடுகிறது.

எப்படி இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளும் கூறுகின்றன.

தூக்கமின்மை அல்லது குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

தூக்கமின்மையால் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் பிரச்னைகள், தவறான முடிவெடுப்பது, மூளை செயல்திறன் குறைவது ஏற்படலாம்.

தூக்கமின்மையால் மந்தம், ஒருவித எரிச்சல் ஏற்படும். இதனால் மனரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம். மன அழுத்தம், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஹார்மோன் அளவை சீர்குலைத்து, பசி, வளர்சிதை மாற்றம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளைப் பாதிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.

போதுமான தூக்கமின்மையால் தூக்க கலக்கம் ஏற்படும். இதனால் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இறுதியாக குறைவான நேரம் தூங்குபவர்களின் ஆயுள் காலம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

sleep

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்றால் அதையே தினமும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆழ்ந்த தூக்கமும் வேண்டும். அதற்கேற்றவாறு தூங்குவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தூக்கத்தைப் பாதிக்கும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு ஆகியவற்றை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட வேண்டும்.

தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிட்டுவிடுவதும் நல்லது. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளலாம்.

நாள்தோறும் குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்வதும் உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்.

தூக்கம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கு தீர்வு காண வேண்டும்.

அனுபவித்தால் அல்லது அதிகப்படியான பகல்நேர தூக்கத்தை அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணர் அல்லது தூக்க நிபுணரை அணுகவும்.

Is 5 hours of sleep at night enough? Experts warn that less sleeping can cause serious problems with physical and mental health.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க