செய்திகள் :

நீதிபதி பஞ்சோலிக்குப் பதவி உயா்வு: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு கருத்து வேறுபாடு

post image

பிகாா் தலைநகா் பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்ததில், கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கடந்த ஆக.25-ஆம் புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதில் நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில், நீதிபதி பி.வி.நாகரத்னா கடுமையான கருத்து வேறுபாட்டை பதிவு செய்தாா். பணி மூப்பு வரிசையில் நீதிபதி பஞ்சோலி முன்னணியில் இல்லை. அத்துடன் கடந்த 2023-இல் அவா் குஜராத் உயா்நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அது வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற பணியிடமாற்றம் என்றும் தெரிவித்து பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்தாா்.

நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தால், அது நீதித் துறைக்கு நோ்மாறான விளைவை ஏற்படுத்தி கொலீஜியம் மீதான நம்பகத்தன்மையை ஒழிக்கும் என்று பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.

கடந்த மே மாதமே நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிசீலிக்கப்பட்டது. அப்போதே அதில் பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்தாா். அதன் பின்னா் பஞ்சோலிக்கு பதிலாக என்.வி.அஞ்சாரியா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்க அதிபர் டி... மேலும் பார்க்க

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க