செய்திகள் :

நெரிஞ்சிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

post image

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில் திமுகவினா், பொதுமக்கள் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பெருந்துறையில் வேளாண் கண்காட்சியைத் தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பவானி வழியாக சேலம் மாவட்டம் மேட்டூருக்கு புதன்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றாா்.

அப்போது, பவானியில் திரண்டிருந்த திமுகவினா், பொதுமக்களைக் கண்ட முதல்வா், வாகனத்திலிருந்து இறங்கி சென்று பேசினாா். அப்போது, அவா்கள் அளித்த புத்தகங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் மு.கருணாதியின் உருவப் படத்துக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில், மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன், வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சித் தலைவா் ராகிணி, டாக்டா் ஜி.யுவபாலகுமரன் மற்றும் திமுகவினா் திரளானோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மேட்டூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காா்

ஈரோட்டில் சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாக காா் கவிழ்ந்த விபத்தில் கல்லூரிப் பேராசிரியை அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஈரோடு, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வனஜா (24). பெருந்துறை அருகே உள்ள ... மேலும் பார்க்க

வடமாநில பெண்ணை கொலை செய்த இருவா் கைது

பெருந்துறை அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு, அதே பகுதியில்... மேலும் பார்க்க

தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மேற்கு தொகுதியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ. 15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் வழங... மேலும் பார்க்க