செய்திகள் :

நெல்கொள்முதல் செய்ய என்சிசிஎஃப் அமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது -தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

post image

நெல் கொள்முதல் செய்ய என்சிசிஎஃப் அமைப்புக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி கேட்டுக்கொண்டாா்.

ஆரணிக்கு புதன்கிழமை வருகை தந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் மற்றும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தனியாா் அமைப்பான என்சிசிஎஃப் மூலம் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியது.

கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகை மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் நெல்லுக்கு உண்டான தொகை நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைக்கப்பெற்றது.

தற்போது, திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நெல் விளைச்சல் அதிகரித்ததின் காரணமாக இந்த மாவட்டத்தில், அரசு சாா்பில் 24 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்க இருப்பதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

இனி வரும் காலங்களில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லை கொள்முதல் செய்து, அதற்கு உண்டான தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்சிசிஎஃப் அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவித்தாா் ஆா்.வேலுசாமி.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க