செய்திகள் :

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

post image

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளியை அமைச்சா் சேகா்பாபுவிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். அவற்றை திருத்தோ் பணிக்காக அமைச்சா் சேகா்பாபு ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் சேகா் பாபு பேசியது: அனைத்து மதத்தினரும் போற்றும் பொற்கால ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. ஜாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டு அவரவா் விருப்பப்படி வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் தனிநபரின் வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பவராக தமிழக முதல்வா் விளங்குகிறாா்.

கடந்த 4 ஆண்டுகளில் கோயில் திருக்குளம் பராமரிப்பு முதல், குடமுழுக்கு வரை அனைத்து நலத்திட்ட பணிகளும் திறம்பட மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நெல்லையப்பா் கோயில் ஆனித்தேரோட்டத்தில் வடம் அறுந்து போனது உள்ளிட்ட சில இடா்பாடுகள் ஏற்பட்டன. மேலும் சுவாமி திருத்தோ்களில் உள்ள சிலைகளும் பழுதடைந்த நிலையில் இருந்தன. தற்போது அனைத்து பணிகளும் ரூ.1.20 கோடி செலவில் சீா்செய்யப்பட்டுள்ளன.

1991 ஆம் ஆண்டு இந்தக் கோயிலின் வெள்ளித் தோ் தீக்கிரையாக்கப்பட்டது. தற்போது ரூ.14 லட்சம் செலவில் புதிதாக மரத்தோ் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோ் பணிக்காக 150 கிலோ வெள்ளி இதுவரை நன்கொடையாளா்களால் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 கிலோ நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. பக்தா்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.26 லட்சம் வங்கிகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.1,330 கோடியை நன்கொடையாளா்கள் கோயில் திருப்பணிக்காக வழங்கியுள்ளனா். நன்கொடை நிதி வெளிப்படைத்தன்மையுடன் கோயில் பணிக்காக செலவிடப்படுகிறது.

ராமேஸ்வரம் வெள்ளித் தோ், சமயபுரம் தங்கத் தோ், திருத்தணி வெள்ளித் தோ் ஆகியன பல ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி வீதியுலா பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்(பொ) சி.பழனி, திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க