செய்திகள் :

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

post image

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்லூரி மாணவிகள்.

திருநெல்வேலி மாவட்டம், ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அதில் 4000 மாணவ, மாணவிகள் பயிலும் நிலையில், கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும், அதனால் 2 கி.மீ தொலைவிலுள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள் மாணவிகள் சிலர்.

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி

நம்மிடம் பேசிய மாணவிகள் சிலர், "2020-ம் ஆண்டு, மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று கல்லூரி வாயிலில் பேருந்து நிறுத்தம் திருநெல்வேலி மாநகராட்சியால் சீர்மிகு நகரத் திட்டத்தின்படி கட்டப்பட்டது. ஆனாலும் பேருந்துகள் சரிவர நின்று செல்வதில்லை.

ஒரு அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இக்கல்லூரியில் நெல்லை மட்டுமின்றி அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

குறிப்பாகப் பயிலும் 80% மாணவ, மாணவிகள் பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், திருச்செந்தூர், ஆத்தூர், உடன்குடி, காயல்பட்டினம் செல்லும் பேருந்துகள் நிற்காமல் செல்வது பெரும் சிரமமாக உள்ளது. இதனால், கல்லூரியிலிருந்து 2.5 கி.மீ தொலைவிலுள்ள பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

மாநகராட்சியால் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வது ஏன்? நிற்காமல் சென்றால் கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் எப்படிப் பயனடைய முடியும்" எனக் கேள்வி எழுப்பினர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதைப் பற்றி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டல கிளை மேலாளர் பூல்ராஜிடம் விளக்கம் கேட்டோம். அவர், "நகர்ப் பகுதியில் அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் இருப்பதால் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றிருக்கலாம். மாணவர்கள் சார்பில் முன்வைக்கிற கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். மிக விரைவிலேயே கல்லூரியில் பேருந்து நின்றுசெல்லும்படி நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.

சம்பந்தப்பட்ட கல்லூரி வாசலில் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க, பேருந்துகள் நிற்கத் தொடங்கியிருக்கின்றன. இது எப்போதும் தொடர வேண்டும் என்பதே மாணவ, மாணவிகளின் கோரிக்கை. மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ள சூழலில், திட்டம் மக்களை எந்தளவுக்குச் சென்றடைகிறது என்ற கண்காணிப்பும் அவசியம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள... மேலும் பார்க்க