செய்திகள் :

நேற்று வந்தவன்! முதல்வர், பிரதமர் பெயர்களைச் சொன்ன தவெக தலைவர் விஜய்!

post image

சென்னை: மிக வித்தியாசமான சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு சந்திக்கும். இந்த தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுவில் கட்சித் தலைவர் விஜய் கூறினார்.

திருவான்மியூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுவில் தலைவர் விஜய் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அப்படியெனில் ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனக்கும் என் கட்சிக்கும் கொடுக்கிறீர்கள்?

அணை போட்டு ஆற்றைத் தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது, தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும் என்று கூறினார்.

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே, செயலிலும் ஆட்சியிலும் அதனைக் காட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரையும், தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதுவரை பெயரைக் குறிப்பிடாமல் அரசுகளை தாக்கிப் பேசி வந்த விஜய் முதல் முறையாகப் பேரைக் குறிப்பிட்டதோடு, பெயரைச் சொல்ல என்ன பயமா என்றும் கேட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய விஜய், மக்கள் சக்தியின் உதவியோடு மக்கள் ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம். காற்றையும் மழையையும் யாரால் கட்டுப்படுத்த முடியும். அதுபோலத்தான், தமிழகத்தில் அமையவிருக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும். யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

தமிழகத்தில் தவெக அமைக்கவிருக்கும் ஆட்சி, அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சியாக இருக்கும். ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம்- ஒழுங்கு முறையாக கண்டிப்புடன் இருக்கும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம், அனைத்தும் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதே நமது இலக்கு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்து தொழிலாளர்கள் பக்கமும் நாம் கண்டிப்பாக நிற்போம். ஏனெனில் நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான்.

தமிழகம் என்பது விவசாய பூமி, விவசாயத்துக்கு எதிராக எந்த திட்டத்தையும் கொண்டு வர வேண்டாம். அதை நாங்கள் எதிர்ப்போம். தமிழகத்தை நாங்கள் எல்லா வகையிலும் பாதுகாப்போம். அது எங்கள் கடமை என்று விஜய் கூறியுள்ளார்.

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ப... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து... மேலும் பார்க்க

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க