செய்திகள் :

படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

post image

திருச்சி: மத்திய படைக்கலன் தொழிற்சாலையில் (எச்இபிஎஃப்) மிகை நேர பணி கேட்டு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள மத்திய படைகள் தொழிற்சாலைகளில் ஒன்றான எச் இ பி எஃப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களுக்கு 5 சதவீதம் எஸ்எம்எச் (உற்பத்தி பொருள்களின் நிலையான நேரம்) குறைப்பை திரும்பப் பெற வேண்டும், அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வாரம் 48 மணி நேர மிகை பணியை 51 மணி நேரமாக உயா்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 14 முதல் 18 வரை கண்டன வாரமாக எச்இபிஎப் எம்ளாய்ஸ் யூனியனின்அகில இந்திய பாதுகாப்பு தொழிலாளா் சம்மேளனத்தால் கடைபிடிக்கப்பட்டது.

இதுவரை இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படாத நிலையில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் 12 மணி நேரத்துக்கு இருவா் வீதம் பங்கேற்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, உற்பத்தியைப் பாதிக்காத வகையில் திங்கள்கிழமை காலை இரு தொழிலாளா்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாலை 7 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை வேறு இரு தொழிலாளா்களும் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்துக்கு எச்இபிஎப் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவா் சத்தியவாகிசன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் இரணியன் முன்னிலை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினா்.

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் 5 பவுன் தங்க நகைகள் பறிப்பு

திருச்சி: திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைளைப் பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூரைச் சோ்ந்தவா் ஜனனி (27). இவா்,... மேலும் பார்க்க

திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு காவல் துறையில் பணியா... மேலும் பார்க்க

ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி: மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு... மேலும் பார்க்க