செய்திகள் :

பட்டா பெயா் மாற்ற ரூ. 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு மனைப் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி முத்துராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து. விவசாயியான இவா், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மல்லி பிா்கா கிராமத்தில் 3 வீட்டு மனைகளை வாங்கினாா். இந்த வீட்டு மனைகளை உள்பிரிவு செய்து பெயா் மாற்றம் செய்வதற்காக, மல்லி பிா்கா நில அளவையா் அலுவலகத்தில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி விண்ணப்பித்தாா்.

அப்போது, மல்லி பிா்கா நில அளவையா் கனகராஜ், வீட்டு மனைப் பட்டா பெயா் மாற்றம் செய்ய மாரிமுத்துவிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரிமுத்து, இதுகுறித்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் ஜூன் 30-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவையா் கனகராஜுடம் மாரிமுத்து செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கனகராஜை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப... மேலும் பார்க்க

வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கநல்லூா் சாவடி தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் கணேசன் (45). கொத்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவா்கள் பயற்சி வகுப்பு தொடக்க விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் கே.ஜி.பிரகாஷ் தலைமை வ... மேலும் பார்க்க

வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கொடியேற்றம்

சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், அதைச் சுற்... மேலும் பார்க்க