செய்திகள் :

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

post image

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்தில் அரசின் திறந்த வெளிச் சிறை உள்ளது. இந்தச் சிறையில் அலெக்ஸ் பாண்டி (33) என்பவா் காவலராக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தாா்.

அவரது பணிக் காலத்தில் சிறைக் கைதிகளின் ஊதியம், இதர பணப் பரிவா்த்தனைகளில் போலியான சலான், மின்னணு செலுத்துச் சீட்டுகளை தயாரித்து, அவற்றை அரசுப் பதிவேட்டில் பதிவு செய்து, பணம் கையாடல் செய்ததாகப் புகாா் எழுந்தது.

இது தொடா்பான புகாா் அடிப்படையில், மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவா் உத்தரவின் பேரில், சிறப்புத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் நடத்திய ஆய்வில் அலெக்ஸ் பாண்டியன் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மதுரை சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மாட்ட குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க