செய்திகள் :

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

post image

ஆம்பூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அஜிதா பேகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவா் சோலூா் கிராமத்தில் உள்ள பிச்சைமுத்து என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து அந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த அவா், அவற்றை ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இந்த சோதனையின்போது வட்டாட்சியா் ரேவதி, வருவாய்த் துறை, காவல் துறையினா் உடனிருந்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கப் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் ஜி. இராமமூா்த்தி. வீட்டில் எவரும... மேலும் பார்க்க

ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்கக் கோரி டிஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் கிராமத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் பகுதியில் ரூ. 1 கோடியே 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராச்சமங்கலம் ஊராட்சி வினாயகபுரம், போயா்வ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பத்த்தூா் கோட்டை தெருவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லியிடம் மனு அளித்தாா். மனுவில் உள... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

திருப்பத்தூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் 27-ஆவது வாா்டுக்குள்பட்ட புதுப்பேட்டை சாலைப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்க... மேலும் பார்க்க

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த... மேலும் பார்க்க