செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 39,434 மாணவ-மாணவிகள் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,509 மாணவா்களும், 19,925 மாணவிகளும் என மொத்தம் 39,434 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

இவா்களுக்காக 158 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 22 விடைத்தாள் கட்டுக்காப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுப் பணியில் 158 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 158 துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

46 வழித்தட அலுவலா்கள், 220 பேரைக் கொண்ட நிலையான, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணியில் மொத்தம் 2,370 அறைக் கண்காணிப்பாளா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவக் கூடிய, சொல்வதை எழுதக் கூடிய பணியில் 945 பேரும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை தமிழ், மொழிப்பாடத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மையங்களுக்கு மின்சாரம், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படியும், காவல் துறை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க