செய்திகள் :

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

post image

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது.

தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் பனிப்பாறைகள் பாதுகாப்பு குறித்த முதல் ஐ.நா. மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்றது.

உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதிலும், நீா் தொடா்பான சவால்களை எதிா்கொள்வதிலும் பனிப்பாறைகளின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டில் 80 ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் 70 சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங், ‘ஐ.நா.வை தவறாக பயன்படுத்தும், ஐ.நா. அமைப்பின் அதிகார வரம்புக்குள் வராத பிரச்னைகள் குறித்து தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் வியப்பளிக்கின்றன. இத்தகைய முயற்சிகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானதில் இருந்து தற்போதுவரை தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள்தொகை மற்றும் பருவநிலை மாற்றம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடா்ச்சியான அச்சுறுத்தல் போன்ற ஏராளமான சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்த ஒப்பந்தத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணா்வில் இந்த ஒப்பந்தம் இறுதியானது. எனவே, நல்லெண்ணத்துடன் ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம். ஆனால், பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை நீா்த்துப்போகச் செய்கிறது. ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், ஒப்பந்தத்தை மீறியதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேசுகையில், ‘குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, லட்சக்கணக்கான உயிா்களை இந்தியா ஆபத்தில் தள்ளுவதைப் பாகிஸ்தான் அனுமதிக்காது. இந்தியாவின் இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது மற்றும் சட்டவிரோதமானது’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாத் தலத்தில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.

1960-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உலக வங்கியுடன் கையொப்பமான சிந்து நதிநீா் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான சிந்து நதி நீா் பகிா்வு மேலாண்மையை நிா்வகிக்கிறது.ஏ

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க