செய்திகள் :

`பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையிட்டது; நம் விமானிகள்.!’ - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

post image

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் இந்திய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "எங்களது சண்டை தீவிரவாதிகளுடனும் அவர்களது ஆதரவு உள்கட்டமைப்புகளுடனும்தான் என்பதில் கவனமாக இருந்தோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தலையிட்டது பரிதாபமான ஒன்று... அதனாலேயே நாங்களும் பதிலளிக்க நேர்ந்தது." என்றார்.

வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஆயுதங்கள்
வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஆயுதங்கள்

தொடர்ந்து, "எங்களது ராணுவ அமைப்புகளின் வலிமை பல சோதனைகளைக் கடந்து போரில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அமைப்பு அற்புதமான செயல்திறனைக் கொண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசாங்கத்தின் பட்ஜெட் மற்றும் கொள்கைகளின் ஆதரவு காரணமாக மட்டுமே சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு சூழலை உருவாக்க முடிந்தது" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், "எண்ணற்ற ஆளில்லா போர் விமானங்களும், ட்ரோன்களும் பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாக்குதல் எதிர்ப்பு UAS அமைப்புகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற இந்திய வான் பாதுகாப்புப் பணியாளர்கள் அவற்றை முறியடித்தனர்" என்றார்.

மேலும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களையும் சில வீடியோக்களைப் பகிர்ந்தார்.

இந்தியாவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் பி.எல் 15 உள்ளிட்ட முக்கிய போர் விமானங்கள், ட்ரோன்களின் சிதறிய பாகங்களை காட்டினார்.

மேலும், இந்திய ராணுவ தளங்கள் மற்றும் அமைப்புகள் முழுமையான செயல்பாட்டில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் எந்த ஒரு ஆபரேஷனையும் நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர், "நாம் இன்னொரு போரில் ஈடுபட்டால் அது இப்போது நடந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இது ஒரு பூனை-எலி விளையாட்டு, எதிரியை வெல்ல நாம் முன்னேற வேண்டும்" என்றும் கூறினார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூரில், பணியாற்றிய அனைத்து விமானிகளும் வெற்றிகரமாக நாடு திரும்பினர் என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ் காய் பேசியது என்ன?

இந்திய ராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய விமானப்படையின் திறனை விளக்குவதற்காக கிரிக்கெட் உவமையைப் பயன்படுத்தினார். அப்போத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியரா நீங்க? Retirement Jobகளுக்கான இந்த இணையதளம் உங்களுக்குத்தான்!

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்குவேலை வாய்ப்புகளைஅடையாளம் காட்டும் சேவையைத்தொடங்கியிரு... மேலும் பார்க்க

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? - ஓர் அலசல்

'ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?' என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி... நிறைவேறப் போகிறதா?ர... மேலும் பார்க்க

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க