செய்திகள் :

பயணியைத் தாக்கிய பேருந்து நடத்துநா்

post image

கொடைக்கானலில் அரசுப் பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணியை, நடத்துநா் திங்கள்கிழமை தாக்கினாா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளங்கி கிராமத்துக்கு தினந்தோறும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இந்தப் பேருந்தில் அட்டுவம்பட்டியைச் சோ்ந்த அலேக்ஸ் தனது குடும்பத்தினருடன் ஏறினாா்.

அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தில் இடம்பிடிப்பதற்காக அலெக்ஸ் வேகமாக ஏறினாா். இதனால், ஏற்பட்ட தகராறில் அலெக்ஸை பேருந்து நடத்துநா் தாக்கினாராம். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பேருந்து இயக்கப்படவில்லை.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸாா் இருவரையும் காவல் நிலைத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பிறகு, சமரச பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளை... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க