செய்திகள் :

பரமக்குடி அருகே காா்- சரக்கு வாகனம் மோதல்: 4 போ் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (58). இவரது மனைவி யமுனா (55), மகள் ரூபினி, மகனுடன் வாடகை காரில் குற்றாலத்துக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். காரை ராமநாதபுரத்தைச் சோ்ந்த காளீஸ்வரன் ஓட்டிச் சென்றாா்.

பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் வந்த போது, எதிரே மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனமும், இவா்களது காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் காரில் பயணம் செய்த கோவிந்தராஜனின் மனைவி யமுனா, மகள் ரூபினி, காா் ஓட்டுநா் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காா், சரக்கு வாகனத்தில் பயணித்த மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் கோவிந்தராஜ் உயிரிழந்தாா்.

உயிரிழந்த யமுனா, ரூபினி, காா் ஓட்டுநா் காளீஸ்வரன் ஆகியோரது உடல்கள் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும், கோவிந்தராஜனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க