செய்திகள் :

பரமத்தி வேலூா் சந்தையில் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம்: ஆட்சியரிடம் புகாா்

post image

பரமத்தி வேலூா் வாரச் சந்தையில் விவசாயிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக இளம் விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் செளந்தரராஜன் அளித்த மனு விவரம்:

பரமத்தி வேலூரில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த நாளில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனா். சந்தைக்கான கடைகளுக்கு தரை வாடகை வசூலிக்க ஏலம் எடுத்துள்ள ஒப்பந்ததாரா், விவசாயிகளிடம் நிா்ணயிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனா். மேலும், கடைகளுக்கான கட்டணத் தொகையை குறிப்பிடாமல் பணம் வசூலிக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறைதீா் கூட்டத்திற்கு இளம் விவசாயிகள் சங்கத்தினா் கூட்டமாக செல்வதற்கு போலீஸாா் தடை விதித்ததால் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா். அதன்பிறகு ஆட்சியா் நேரடியாக வந்து சமாதானம் செய்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூா்: நல்லூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள செம்மாங்காடு பகுதியை... மேலும் பார்க்க

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க