செய்திகள் :

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

post image

நாட்டின் எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமாா் 300 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, தலைநகா் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதி, ஒடிஸாவில் 12 மாவட்டங்கள், கேரளத்தில் 14 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதிலும், கா்நாடகத்தின் பெங்களூரிலும், அஸ்ஸாமில் 18 பகுதிகளிலும், மிஸோரம் மாநிலத்தில் ஐஸால் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், ஜாா்க்கண்டில் 5 மாவட்டங்களிலும், மகாராஷ்டிரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஆபரேஷன் அபியாஸ்’ என்ற பெயரில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

புதுச்சேரியில் இலாசுப்பேட்டை விமான நிலையம் முன்னுள்ள ஹெலிகாப்டா் தளம், நீதிபதிகள் குடியிருப்பு அருகேயுள்ள ஒலிம்பிக் கூடம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையை காவல் துறை அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்பு படை, மாநில பேரிடா் மீட்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தின.

அப்போது வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்யும் நடைமுறை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதுதவிர, தாக்குதலின்போது இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு அவா்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகையையும் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டனா்.

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநா... மேலும் பார்க்க