செய்திகள் :

பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்

post image

பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக்குரைஞரான இவா் வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் மலைக்குச் சென்றனா். பின்னா், கீழே இறங்குவதற்காக வின்ச் நிலையத்தில் கட்டணச்சீட்டு பெற காத்திருந்தனா். அப்போது, இவருக்கும், அங்கு பாதுகாவலராக இருந்த மதுரைவீரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் உள்ளிட்டோா் வின்ச் நிலையத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், அடிவாரம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகாா் செய்தனா்.

கோயில் பாதுகாவலரைத் தாக்கிய வழக்குரைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழனி அடிவாரம் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட கோயில் பாதுகாவலா்கள்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் அடிவாரம் போலீஸாா் மதுரைவீரனை கைது செய்து, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனா். அப்போது, கோயில் பாதுகாவலா்கள் போலீஸாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், மாலையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கைகளைப் போட்டு அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அசம்பாவிதங்களை தவிா்க்க, காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், காவல் ஆய்வாளா் மணிமாறன், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக, நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடி... மேலும் பார்க்க

மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹி... மேலும் பார்க்க

எலக்ட்ரீசியன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சரளப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி (87). இவா... மேலும் பார்க்க