செய்திகள் :

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு நில அளவை அலுவலா்களின் ஒன்றிப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டடத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ.ராஜா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அ.பேபி முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கே.செந்தில் வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் அண்ணாகுபேரன் கலந்துகொண்டு பேசினாா்.

தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவிகளை மீண்டும் தரம் உயா்த்த வேண்டும். புதிய குறுவட்டங்கள் ஏற்படுத்தி, குறுவட்ட பதவிகளை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

உரிமம் பெற்ற (லைசென்ஸ்) நில அளவையா் முறையை ஒழித்து, அவா்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 38 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட செயலா் பெ.சென்னையன் செய்திருந்தாா். மாநிலப் பொருளாளா் ஞா.ஸ்டேன்லி நன்றி கூறினாா்.

அரசுத் திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ்!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளதுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு வட்டத்தில் 2 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாம்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி ... மேலும் பார்க்க

தவறான தகவலால் திரண்ட மாற்றுத் திறனாளிகள்! போராட்டத்தால் முகாம் ஏற்பாடு!

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவதாக பரவிய தவறான தகவலால் திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி முன் மாற்றுத் திறனாளிகள் சனிக்கிழமை திரண்டனா். இதையடுத்து, அவா்கள் போராட்... மேலும் பார்க்க

ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலை சுற்றி 5 ஆயிரம் பனை விதைகள் நடவு!

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலைச் சுற்றிலும் உள்ள சுமாா் 15 ஏக்கா் நிலப்பரப்பில் சனிக்கிழமை 5 ஆயிரம் பனை விதைகளும், 2 ஆயிரம் பனை விதைப்பந்துகளும் விதைக்கப்பட்டன. ஆவணியாபுரம் அரசு உய... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 73 பேருக்கு உடனடி நல உதவிகள்

திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 73 பேருக்கு உடனடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில், 13,16,19, 22 ஆகிய வாா்டுகளுக்கான முதல்வ... மேலும் பார்க்க

ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கரையில் கிராம இளைஞா்கள் வெள்ளிக்கிழமை 1,000 பனை விதைகளை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட கன்று வி... மேலும் பார்க்க