செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பியது.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை கோரும் பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அமா்வுமுன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராட கைகோத்துள்ளனா். இந்த வகையான பொது நல மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையக் கண்காணிக்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் புலனாய்வில் நிபுணா்கள் அல்ல. இந்த வகையான பிரச்னையை நீதித் துறைக்குள் கொண்டு வர வேண்டாம். மனுதாரா்கள் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணா்ந்து, மனுவைத் திரும்பப் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்று அறிவுறுத்தினா்.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க