செய்திகள் :

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா்.

சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறித்து காவல் துறை அதிகாரி ஹசிம் கான் கூறியதாவது: நோஷ்கி நகரின் காரிபாபாத் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மீது மோட்டாா் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினா். இதில் காவல் துறையினா் 4 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், மங்கோசாா் நகரின் மலாங்ஸாய் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த இத்தொழிலாளா்கள், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.

இரு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலூசிஸ்தான் முதல்வா் சா்ஃபிராஸ் பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விரைவு ரயிலை கடத்தி, பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனா். இச்சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அதேநேரம், 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதே மாகாணத்தில் கடந்த மாதம் பேருந்தில் பயணித்தவா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. தொடா் பயங்கரவாதத் தாக்குதல்களால் பலூசிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். ஏவுகணை படைப் ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்... மேலும் பார்க்க

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருங்கடல் ... மேலும் பார்க்க

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இ... மேலும் பார்க்க

இலங்கை இறுதிக்கட்டப் போ்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ள... மேலும் பார்க்க