செய்திகள் :

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?

post image

பாகிஸ்தானில் நேற்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களில் 5.7 ரிக்டர் அளவிலும், 4.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவான நிலையில், மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள், அணு ஆயுத சோதனையாக இருக்கலாம் என எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், துறை சார்ந்த அதிகாரிகளோ அல்லது நிபுணர்களோ இது குறித்து எந்தவிதக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தானில் மே 10ஆம் தேதி அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதற்கு மறுநாளே 4.0 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் பதிவானது.

இந்த இரு நில அதிர்வுகளிலும் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே நேற்று பிற்பகல் பாகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் பதிவானது. இந்த நில நடுக்கம் பூமியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதாக வரும் செய்திகளுக்குப் பின்னால், அணு ஆயுத சோதனை இருக்கலாம் என சமூக வலைதளப் பக்கங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான போரில் அணு ஆயுத மிரட்டல்களை பாகிஸ்தான் விடுத்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும், துறை சார்ந்த நிபுணர்களோ வல்லுநர்களோ இது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

மீண்டும் ஆஸ்திரேலியாவின் பிரதமரானார் அந்தோனி அல்பனீசி!

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக வெற்றியடைந்த அந்தோனி அல்பனீசி 2வது முறையாகப் பிரதமாராகப் பதவியேற்றார்.ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் கடந்த மே 3 ஆம் தேதிய... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!

மியான்மர் நிலநடுக்கத்தினால் இடிந்த தாய்லாந்து நாட்டின் வானுயர கட்டடத்தின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்... மேலும் பார்க்க

லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரிப்பொலியில் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆய... மேலும் பார்க்க

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமா... மேலும் பார்க்க

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிகழ்ந்தது சாதாரண நிலநடுக்கமே: அணு ஆயுத சோதனையல்ல: தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா்

பாகிஸ்தானின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமே; அணு ஆயுத சோதனையல்ல என்றும் தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தாா். பாகிஸ்தானின் பஞ... மேலும் பார்க்க