செய்திகள் :

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் குவெட்டாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் பலூச். சனிக்கிழமை இவரது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் அவரைக் கடத்த முயன்றுள்ளனர்.

ஆனால் அதை எதிர்த்து போராடிய அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு பலூச்சின் மூத்த மகனும் கடத்தப்பட்டு பின்னர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் கூட்டாட்சி பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உக்ரைன் - ரஷியா இடையே இன்று 303 கைதிகள் பரிமாற்றம்!

உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கிடையே 303 போர்க் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 25) பரிமாற்றம் செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 390 கைதிகளும், சனிக்கிழமை 307 கைதி... மேலும் பார்க்க

ஐபோன் மட்டுமில்லை; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

ஐபோன்களுக்கு வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருள்கள் அனைத்துக்கும் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, டிரம்ப் தெரிவித்ததாவ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர். கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவர... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் குடியுரிமை கோரும் அமெரிக்கர்கள்! புது டிரண்ட்?

பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டனில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்... மேலும் பார்க்க

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டாா்!

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராஜிநாமா ... மேலும் பார்க்க

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா்.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள்... மேலும் பார்க்க