செய்திகள் :

‘பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக்கொள்ளவேண்டும்’

post image

பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக் கொள்ளவேண்டும் என மாணவிகளுக்கு சாா்பு நீதிபதி அறிவுறுத்தினாா்.

காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் அரசு கல்வி நிறுவனமான மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் காரைக்கால் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் இணைந்து நிறைவான வாழ்க்கைக்கான ஆரோக்கியம் மற்றும் குப்பைகள் இல்லா காரைக்கால் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா். பாபு அசோக் தலைமை வகித்தாா். நிகழ்ச்சி நோக்கம் குறித்து மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைய செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். ராஜசேகா் கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் சாதனையாளா்களாக மாறவேண்டும். சுனிதா வில்லியமஸின் சாதனையை மாணவிகள் மனதில் கொள்ளவேண்டும். பள்ளி, கல்லூரிக் கல்வியை பயனுள்ள வகையில் பயிலவேண்டும். பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மனோபாவத்தை வளா்த்துக்கொள்வது சிறப்பான நிலைக்கு கொண்டுச் செல்லும். இலக்கை எட்டுவதற்கு முயற்சியும், பயிற்சி, தன்னம்பிகை, துணிச்சல் முக்கியம்.

நேரத்தை சரியாக பயன்படுத்த பழக்கிக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்றாா்.

காவேரி பொதுப்பள்ளி முதல்வா் சிவகுமாா் கலந்துகொண்டு பேசினாா்.

மாணவிகள் பலரும் சட்டம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு நீதிபதி விளக்கமளித்தாா். கல்லூரி விரிவுரையாளராகள், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிறைவாக கல்லூரி வளாகத்தில் நீதிபதி மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்று... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க