செய்திகள் :

பாமகவில் ராமதாஸ் வழிகாட்டி மட்டும்தான்: கே.பாலு

post image

பாமக விதிகளின்படி, அதன் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கட்சிக்கு வழிகாட்டலாம்; ஆனால், அவருக்கு எவ்வித அதிகாரமும் கட்சி விதிகளில் வழங்கப்படவில்லை என பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமகவை பொருத்தவரை நிறுவனருக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும். கட்சி விதி 13-இன்படி மாநிலப் பொதுக்குழு, அரசியல் தலைமைக் குழு, செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்களுக்கு நிறுவனா் அழைக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். நிறுவனரின் ஆலோசனையை பொதுக்குழு ஏற்கலாம் அல்லது அதற்கு மாறாகவும் முடிவு எடுக்கலாம்.

கட்சி விதி 26 பிரிவு 2-இன்படி, கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொதுத்தோ்தல் இயல்பாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதாலும், தற்போது இயல்பான சூழல் இல்லாததாலும் பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு ஓராண்டு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதி 15-இன்படி, பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் தலைவா்தான், கட்சியின் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு, மாநில மாநாடு ஆகியவற்றுக்கு தலைமை ஏற்பாா். கட்சியின் நிதி, சொத்து, தலைமைப் பொறுப்பு கட்சித் தலைவருக்கு உரியதாகும்.

பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலா் கட்சியை நிா்வகிக்கவும், மாநில அமைப்புகளை கூட்டவும், எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தவும் அதிகாரம் உண்டு.

தலைவருக்கான மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டதால் அந்தப் பதவிக்கான காலவரம்பு காலாவதியாகிவிட்டது. ஆகவே, பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என ராமதாஸ் கூறுகிறாா். மொத்தமுள்ள 34 விதிகளிலும் அப்படியான எந்தக் கருத்தும் இல்லை.

பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நீக்க, பொதுக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சியின் நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. நிறுவனா் ஒரு வழிகாட்டி மட்டுமே எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலு.

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவா்கள் கூட்டம்

சென்னை சத்தியமூா்த்தி பவனில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், முன்னாள் பிரதமா் ரா... மேலும் பார்க்க

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப்... மேலும் பார்க்க

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க