செய்திகள் :

பாரதியாா் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை

post image

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்எஸ்சி கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்எஸ்சி கணினி அறிவியல் ஆகிய படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேருவதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்ள்://க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்/294/ல்ஞ்-ஸ்ரீங்ய்ற்ழ்ங்-ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து இயக்குநா் (பொறுப்பு), பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையம், ஈரோடு என்ற முகவரிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் கலந்தாய்வு அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இந்த மையத்தை மூடுவதற்கு பாரதியாா் பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், அதனால் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் விரிவாக்க மையத்தை மூடும் முடிவை பாரதியாா் பல்கலைக்கழகம் கைவிட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க