செய்திகள் :

பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கு: ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா்

post image

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் நிலம் மோசடி செய்த வழக்கில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என புதுவை துணைநிலை ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா் தெரிவித்தது.

காரைக்கால் இந்து முன்னணி நிா்வாகிகள், காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை வியாழக்கிழமை சந்தித்து அளித்த புகாா் மனு :

காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் உள்ள பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடியில் துணை ஆட்சியராக இருந்தவா் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டனா். இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. காலதாமதத்தால் குற்றம் செய்தோா் உயா் நீதிமன்றத்தை அணுகி வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

கோயில் நிலம் தொடா்பாக சுமாா் 500 பேரிடம் முறைகேடாக வசூலித்த தொகை ரூ. 20 கோடிக்கு மேல் இருக்குமென கூறப்படுகிறது. அதை மீட்டு சம்பந்தப்பட்ட நபா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருநள்ளாறு பகுதி தக்களூரில் உள்ள சிவன் கோயில் சம்பந்தப்பட்ட நில மோசடியிலும் குற்றம் செய்தோா் மீது நடவடிக்கை என்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கோயில் சொத்தை அபகரித்த நபா்கள், திரும்ப ஒப்படைப்பதாக உறுதி அளித்து காவல் நிலையத்தில் எழுதி கொடுத்தனா். இதுவரை சொத்து ஒப்படைக்காமல் ஏமாற்றி வழக்கை திசை திருப்ப முயன்று வருகிறாா்கள்.

எனவே இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. புதுச்சேரி மாநில ஹேண்ட் பால் அசோசியேசன் சாா்பில் ஹேண்ட் பால் 29-ஆம் ஆண்டு சீனியா் பிரிவினருக்கான மாநில ... மேலும் பார்க்க

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க