செய்திகள் :

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

post image

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக செயல்படுத்த, அரசுத் துறைகளின் அலுவலா், பணியாளா்கள் அனைவருக்கும் தமிழ் வளா்ச்சித் துறையின் மூலம் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் 2025 -26- ஆம் ஆண்டுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ரேஸ்கோா்ஸில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் செப்டம்பா் 2, 3-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகிய நிலைகளில் பணிபுரியும் பணியாளா்கள் கலந்து கொள்ளலாம். செப்டம்பா் 3-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் தலைமையேற்று சிறப்பிக்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவா் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவா் ஷா்மி... மேலும் பார்க்க