செய்திகள் :

பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?

post image

காதலில் நாடகத்தன்மையான விஷயங்கள் நடப்பது சாதாரணமானதுதான். ஆனால் பீகாரில் காதலி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

viral video

மின்சார கம்பத்தின் மேலேறிய இளைஞர் ஒருவர் பெரிய அளவிலன இடுக்கி போன்ற ஒரு கருவியை வைத்து மின் இணைப்புகளைத் துண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த இளைஞரின் காதலியின் தொலைபேசி எப்போதுமே பிஸியாக இருந்ததால் கடுப்பாகி, இப்படிச் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்த தகவல் உண்மையா என உறுதிபடுத்தப்படவில்லை.

போலி செய்தியா?

இணையவாசிகள் பலரும் இந்த வீடியோ ஒரு லைன்மேன் வேலை செய்யும் வீடியோவாக இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர். எனினும் ஜீ நியூஸ், மிண்ட் லைவ் உள்ளிட்ட பல செய்தி சேனல்கள் அடையாளங்களைத் தெரிவுபடுத்தாமல் இதே செய்தியைப் பகிர்ந்திருக்கின்றன.

இந்த செய்திகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு மின்சார வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றுவதை சுட்டிக்காட்டும் வகையில் electri.cian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது.

எனினும் இது உண்மையல்ல என முழுவதுமாக புறக்கணித்துவிட முடியாது. ஏனென்றால் பீகாரில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் அப்படி.

காதலனை சந்திக்க கிராமத்தையே இருளில் மூழ்கடித்த காதலி

2023ம் ஆண்டு பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் ப்ரீத்தி குமாரி என்ற பெண், தனது காதலனை ரகசியமாக சந்திப்பதற்காக மொத்த கிராமமும் இருளில் மூழ்கும் வண்ணம் மின்சாரத்தைத் துண்டித்து வந்துள்ளார்.

இதனால் அவதியுற்ற கிராமமக்கள் ஒருநாள் பிரீத்தியையும் அவரது காதலர் ராஜ்குமார் என்பவரையும் பிடித்துள்ளனர். அன்று ராஜ்குமாரை சில கிராமவாசிகள் தாக்கியிருக்கின்றனர். சில நாட்களில் இருவருக்கும் உள்ளூர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.

School Fees: "1-ம் வகுப்புக்கு ரூ. 8 லட்சம்" - வைரலான பள்ளிக் கட்டணம்; நிதி ஆலோசகர் சொல்வது என்ன?

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான தனியார்ப் பள்ளியின் கல்விக் கட்டணம் (fee structure) அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. 'எக்ஸ்' தளத்தில் பகிரப்பட்ட பதிவில், வெறும் பள்ளிக்கான ... மேலும் பார்க்க

`We are engaged’ - புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்தத்த்தை அறிவித்த பிக்பாஸ் செலிபிரட்டிஸ்

சின்னத்திரையில் வில்லி கதாப்பாத்திரத்தில் களமிறங்கி பிக்பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை வென்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாந்த் பிக்பாஸ் சீசன்-8 ல் கல... மேலும் பார்க்க

பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு; மரத்தில் ஏறி செய்த வேலை!

பொதுவாக குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடமிருந்து பணத்தை எடுத்த... மேலும் பார்க்க

Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!

ஜப்பான் அரசாங்கம் அங்குள்ள மிக உயரமான மலையான பூஜி, எரிமலை வெடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இது... மேலும் பார்க்க

``மாதத்தில் 15 நாள் கணவன், 15 நாள் காதலன்'' - பெண் போட்ட நிபந்தனை; பஞ்சாயத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே கணவனை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஊதா நிற டிரம்மில் அடைத்த மனைவியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்கள் உஷாரடைந்துள்ளனர். மனைவி ... மேலும் பார்க்க

Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்

ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறி... மேலும் பார்க்க