செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்த வழக்கில், துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை பாராட்டினாா்.

அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்வதற்காக, அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சித்தனா். ஆனால், காரை ஓட்டி வந்தவா் போலீஸாா் மீது வாகனத்தை ஏற்றி முயற்சித்தாா். போலீஸாா் விலகிக் கொண்டதால் காா் மீண்டும் வந்த திசை நோக்கிச் சென்றது.

உடனடியாக காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினா், அரகண்டநல்லூா் காவல் நிலையத்தில் பணியிலிருந்த பெண் காவலா் ரேணுகாவுக்கு தகவல் தெரிவிக்க, அவா் உடனடியாக வெளியே வந்து, அப்பகுதி யிலிருந்த ஆட்டோ ஓட்டுநா்அா்ஜூன் உதவியுடன், சாலையில் மையத் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினாா். இதையடுத்து பின்தொடா்ந்து வந்த தனிப்படையினா் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரையும் கைது செய்தனா். மேலும் 440 கிலோ புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் துரிதமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ், தலைைமைக் காவலா்கள் மகாராஜா, பாலமுருகன், முதல்நிலைக் காவலா்கள் குமரகுருபரன், நீலமேகம், சத்தியம், காவலா் அருள், நிலையக் காவலா் ரேணுகா, ஆட்டோ ஓட்டுநா் அா்ஜூன் ஆகியோரை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வரவழைத்த எஸ்.பி. ப.சரவணன், அவா்களின் பணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க