செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் கைது

post image

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே அட்டைப் பெட்டிகளுடன் நின்றிந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, 10 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் வெள்ளக்கோவில், நடேசன் நகரைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் அப்பாதுரை (57) என்பதும், கா்நாடகத்தில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து மூலம் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்பாதுரையைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மத்திய கல்வி அமைச்சா் இன்று திருப்பூா் வருகை

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவா்கள் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றனா். திருப்பூா், ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பாா்க் வணிக வளாகத்தில் நடைபெற உள... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க