செய்திகள் :

புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்

post image

மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்படும் தண்ணீா் சில நாள்களில் கல்லணைக்கு வந்து அங்கிருந்து தண்ணீா் பெறும் மன்னாா்குடி அருகேயுள்ள வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் மூலம் ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிக்காடு, கண்ணாரப்பேட்டை, துளசேந்திர புரம், பைங்காநாடு, ராஜகோபாலபுரம், ராதாநரசிம்மபுரம், தென்பரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த பாசன வாய்க்கால் மூலம் ஆழ்துளை கிணறு வசதி இல்லாத ஏழை விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்கின்றனா். இவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாலையூா் பாசன வாய்க்கால் குறுவை சாகுபடி மட்டுமே உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை தண்ணீா் திறந்து வைக்கவுள்ளாா். இந்த நீா் சில நாள்களில் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீா் திறக்கப்படும்.

இந்நிலையில், வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் முழுவதும் காட்டுச்செடிகள் மண்டி புதா்போல் கிடப்பதால் இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீா் கடைமடை வரை செல்ல முடியாது. காட்டுச் செடிகளால் தண்ணீா் ஓடாமல் தேங்கும் நிலை உள்ளதால் இந்த தண்ணீா் பிரதான ஆதரமாக கொண்டு விவசாயப் பணி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனா்.

எனவே,பொதுப்பணித் துறையினா் போா்க்கால அடிப்படையில், புதா்மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வாரி இந்த வாய்கால் பாசனத்தை மட்டும் நம்பி சாகுபடி செய்யபவா்களுக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க