செய்திகள் :

புதிய கரோனா வைரஸ் முதியோர்களை அதிகம் பாதிக்கிறதா? - நம்பிக்கையும் உண்மையும்!

post image

செல்லப்பிராணிகள் மூலமாக புதிய கரோனா வைரஸ் பரவுகிறதா? முதியோர்களை அதிகமாக இந்த வைரஸ் பாதிக்கிறதா?

சீனாவில் புதிதாகப் பரவி வரும் புதிய கரோனா வைரஸ்(HKU5-CoV-2) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் வைரஸ் தொற்றுகளுக்கான நிபுணர் டாக்டர் ஜேக்கோப் ஜான்.

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்க இறைச்சி, மீன், முட்டை, பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

புதிய கரோனா வைரஸ்(HKU5-CoV-2) பாதிப்பைத் தடுக்க இறைச்சி, முட்டை, மீன் சாப்பிடுவதைத் தவிர்க்கத் தேவையில்லை. ஏனெனில் புதிய கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு ஏதும் இருப்பதாக எந்த அறிக்கையும் இல்லை.

செல்லப்பிராணிகள் புதிய கரோனா வைரஸைப் பரப்பலாம்

இல்லை. செல்லப்பிராணிகள் புதிய கரோனா வைரஸைப் பரப்புவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

புதிய வைரஸால் ஊரடங்கு அச்சுறுத்தல் உள்ளது

ஒரு புதிய தொற்று உருவாகிறது என்றால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லதுதான். ஆனால் H5N1 வைரஸ் காய்ச்சல் அடுத்த ஒரு தொற்றுநோய்க்கான காரணமாக இருக்கலாம்.

கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இது வௌவால் மூலமாகப் பரவும் ஒரு கரோனா வைரஸ் போலத் தெரிகிறது. கரோனா வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது.

இது வயதானவர்களை மட்டுமே பாதிக்கிறது

அதுபற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் முதியோர்களிடையே சுவாசத்தால் பரவும் வைரஸ்களால் கடுமையான நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?

சீனாவில் புதிய வைரஸ்

கோவிட்-19 வைரஸ் பரவி உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் HKU5-CoV-2 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வைரஸ் பரவி வருவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

வௌவால்கள் மூலம் பரவும் இந்த புதிய வகை வைரஸ் ஹாங்காங்கில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது விலங்கினங்கள் மூலமாகவோ பரவ வாய்ப்புள்ளது என்றாலும் கோவிட் - 19 யைப் போன்று இதனால் பெரிய ஆபத்து இல்லை என்றே கூறுகின்றனர். இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?

இந்தியர்கள் தங்கள் ஊதியத்தை எவ்வாறு செலவு செய்கின்றனர், எவ்வளவு தொகையை மாதத் தவணையாக செலுத்துகின்றனர் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.சமீபகாலமாக சம்பாதிப்பதற்கு ஏற்ப கடன் வாங்குவதும் மக்களிடைய... மேலும் பார்க்க

புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

புகைப்பிடிக்காதவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் ... மேலும் பார்க்க

பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!

உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் மாறிவரும் சூழலுக்கு ஏற்... மேலும் பார்க்க

கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் என்னென்ன?

தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 33 வயதில் முதல்முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு மன அழுத்தத்துடன் ஹைப்போ தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான ஹார... மேலும் பார்க்க

பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

பெண்களுக்கு பிசிஓஎஸ் எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் பிசிஓஎஸ் என்று அர்த்தமா?இதுபோன்று பிசிஓஎஸ் குறித்த தவறான நம்பிக்கைக... மேலும் பார்க்க