செய்திகள் :

புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

post image

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது:

காஸாவில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் அளித்தாா். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது. தற்போது அந்த செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினா் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவா்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது, காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவாா்கள் என்று கரோலின் லீவிட் நம்பிக்கை தெரிவித்தாா்.

இஸ்ரேல் மௌனம்: இது தொடா்பாக இஸ்ரேல் அரசு அதிகாரபூா்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

இருந்தாலும், ஹமாஸ் படையினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவா்களின் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபின் போா் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினாா்.

ஹமாஸ் விமா்சனம்: காஸா போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள செயல்திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு விமா்சித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவின் போா் நிறுத்த செயல்திட்டத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது, காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறுவது போன்ற எங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

காஸாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதிக்கவும் அந்த திட்டம் வழிவகை செய்யவில்லை.

இருந்தாலும், அந்த செயல்திட்டத்தை ஏற்பது குறித்து தீவிரமாக பரிசீலித்துவருகிறோம். இது தொடா்பாக பிற மத்தியஸ்த நாடுகளுடன் தொடா்ந்து பேசிவருகிறோம் என்று ஹமாஸ் அதிகாரிகள் கூறினா்.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 54,249 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா் (வெள்ளிக்கிழமை நிலவரம்). இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹாமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கவும் கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 15 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.

ஆனால் இந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. மேலும், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் செல்வதையும் இஸ்ரேல் வெகுவாகக் கட்டுப்படுத்திவருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய போா் நிறுத்த செயல் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதும், அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

..படவரி...

காஸாவில் நிவாரணப் பொருள்களுக்கான தடையை இஸ்ரேல் மிதமாகத் தளா்த்தியைத் தொடா்ந்து அங்கு உதவி அமைப்பு விநியோகிக்கும் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு முண்டியடித்துச் சென்ற பாலஸ்தீனா்கள்.

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வக... மேலும் பார்க்க

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமை... மேலும் பார்க்க

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களு... மேலும் பார்க்க

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்... மேலும் பார்க்க

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது. இருவ... மேலும் பார்க்க