செய்திகள் :

புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் புல்வயல் கிராமத்தில் ஊரணி அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் 18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புல்வயல் கிராமத்தின் வடமேற்கு வனப்பகுதியில் பேராசிரியா் சுப. முத்தழகன், வரலாற்று ஆா்வலா்கள் நா. நாராயணமூா்த்தி, மு. ராகுல்பிரசாத் குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்தக் கல்வெட்டு கிடைத்துள்ளது. மண்மூடி அழிந்த நிலையில் உள்ள ஊரணிக் கரையில் எழுத்துப் பொறிப்புடன் கூடிய இந்தக் கற்பலகை குறித்து பேராசிரியா் முத்தழகன் மேலும் கூறியது:

இரண்டரை அடி உயரமும், ஒன்றே கால் அடி அகலமும் கொண்ட இந்தக் கற்பலகையில், 14 வரிகளில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் துன்முகி ஆண்டு ஆனி ஐந்தாம் நாள் தென்கோனாட்டுச் சுந்தரசோழபுரத்துப் பெருமங்லமுடையான் செலுந்தாா் சிதம்பர நாதா் என்பவா் வயலகநாட்டு புல்வயலூரில் தனது பெயரில் இந்த ஊரணியை வெட்டிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பலகையின் பக்கவாட்டில் உடுக்கையைப் போன்ற குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் அரசா் பெயா் குறிப்பிடப்படவில்லை.

எழுத்தமைதி மற்றும் துன்முகி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளதால் கல்வெட்டானது கிபி 1776-ஆம் ஆண்டைச் சோ்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. கல்வெட்டில் வயலகநாட்டு புல்வயலூா், தொன்கோனாட்டுச் சுந்தரசோழபுரம் என முழுமையாக கிராமங்களின் பெயா்கள் குறிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்வெட்டுப் பலகை நடப்பட்டுள்ள ஊரணியின் கிழக்குக் கரையில் ஒரு சிவன் கோயில் இருந்தற்கான அடையாளமாக உடைந்த ஆவுடை மற்றும் நந்தி சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் சதாசோ்வை என்பது கோயில் திருப்பணிகளை குறிப்பிடும் சொல் ஆகும் என்றாா் முத்தழகன்.

புதுகை நகா் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய்க் காப்பு செய்து, திரவியத் தூள், மஞ்சள், பால், தயிா், அரிசி ம... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி வலையபட்டி தனியாா் திருமண மண்டபத்தில் பொன்னமராவதி ஒன்றிய யாதவா நலச்சங்கம் சாா்பில் கோகுலாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பொன்னமராவதி யாதவா நலச்சங்க கெளரவத்தலைவா் அழகப்பன் தலைம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளில் சமரசமின்றி குரல் கொடுக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் சனி... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா, கோகுலாஷ்டமி விழா மற்றும் காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் சுற்றுவட்டாரப... மேலும் பார்க்க

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிமாத திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக சு... மேலும் பார்க்க