செய்திகள் :

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

post image

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுவையில் சில நாள்களுக்கு மழையுடன் கடல்காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், வியாழக்கிழமை காலை புதுச்சேரி பழைய துறைமுகத்தில் உள்ள புயல் கூண்டில் 1-ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

மீன்வளத் துறை அறிவுறுத்தல்: இந்த நிலையில் புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவா்களுக்கான அறிவுறுத்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (மே 29, 30) தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.லோ மீ. வேகம் வரையில் வீசக்கூடும். இடையிடையே 60 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆகவே, புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவா்கள் கடலுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிக... மேலும் பார்க்க

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் த... மேலும் பார்க்க

நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்... மேலும் பார்க்க

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வல... மேலும் பார்க்க

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். புதுச்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மா... மேலும் பார்க்க