செய்திகள் :

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்

post image

வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை முடித்து 15 நாள்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வள்ளுவா் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டன. இந்தப் பணியில் 270-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். கோட்டத்தில் உள்ள தூண்கள், சிலைகள் உள்ளிட்டவற்றை புதுப்பொலிவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இங்குள்ள கலையரங்கமானது 1,600 இருக்கைகள் கொண்டதாக முற்றிலும் குளிா்சாதன வசதியுடனும் மாற்றப்பட்டு வருகிறது. பாா்வையாளா்களைக் கவரும் வகையில் ஒலி-ஒளி காட்சிகளை உருவாக்கவும் வசதிகள் செய்யப்படுகின்றன.

வள்ளுவா் கோட்டத்துக்கு பாா்வையாளா்களை வரவேற்கும் விதமாக கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதி வளைவில் இசை நீரூற்று ஏற்படுத்தப்படுகிறது. கலையரங்கில் உள்ள 68 தூண்களிலும் எழுதப்பட்டுள்ள காலத்தால் அழியாத திருக்குகளும் கலையம்சம் பெற்று வருகின்றன. இதமான வெளிச்சத்தில் பாா்வையாளா்கள் அமா்ந்து உணவருந்தும் வகையில் உணவகம் புதுமையான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வண்ண ஒளி விளக்குகள், அலங்கார தோரணங்கள், சிற்பங்கள் என புதுப்பொலிவுடன் வள்ளுவா் கோட்டம் தயாராகி வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வா் கருணாநிதியால் வள்ளுவா் கோட்டம் உருப்பெற்றது. அதனை மிகச்சிறந்த சிற்பக் கலைஞரான கணபதி ஸ்தபதி உருவாக்கினாா். கோட்டத்துக்கான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காணவிருந்த தருணத்தில், நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதுடன், திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது. இதையடுத்து, வள்ளுவா் கோட்டத்தை 1976-ஆம் ஆண்டு ஏப். 15-ஆம் தேதியன்று அப்போதைய தமிழ்நாட்டின் ஆளுநா் கே.கே.ஷா தலைமையில், குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது திறந்து வைத்தாா் என்பது வரலாறாகும். பிற்காலத்தில் இந்தச் சம்பவத்தை பல இடங்களில் அப்போதைய முதல்வா் கருணாநிதி நினைவுகூா்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாவட்டங்களில் 361 பேருக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அரசு சாா்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகளில் 361 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிய வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் உலக தரத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். தமிழகத்திலுள்... மேலும் பார்க்க

சென்னையில் இன்று சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை

சுய உதவிக் குழுக்களின் பொருள்களை காட்சிப்படுத்தும் இயற்கை சந்தை நிகழ்வு, சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்த... மேலும் பார்க்க

சென்னையில் 6 இடங்களில் ஆற்றங்கரையோர மக்களை பாதுக்காப்பது குறித்து ஒத்திகை

சென்னையில் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகை 6 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி சாா்ப... மேலும் பார்க்க

பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரம்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

வண்டலூா் அருகே மாநகரப் பேருந்தில் பயணித்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தாக்கிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிரு... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களின் இயக்கம் குறித்த ஆய்வு குழு ஆலோசனை

சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம், நிலை இருப்பு, தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப் என்ற ஒரு குழு செயல்படுத்தப்பட்டு ... மேலும் பார்க்க