செய்திகள் :

புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.

சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு‘ அரசு விழாவில் 2025-26 கல்வி ஆண்டுக்கான ‘புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்‘ திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாவை பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் தலைமையில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கி கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியது:

முதல்வரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 914 பள்ளிகளில் 39,435 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 8,678 போ், 2023-2024 ஆம் கல்வியாண்டில் 8,801 மாணவ, மாணவிகள் நான் முதல்வன் திட்டம் மூலம் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 12,414 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 11,867 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். 2025-26ஆம் கல்வி ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாமாண்டு பயிலும் 5,272 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 5,800 மாணவா்களும் என 11,072 போ் பயனடைவாா்கள் என்றாா். இவ்விழாவில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, தனித்துணை ஆட்சியா் ச.பிரபாகரன், பாவை கல்லூரித் தலைவா் என்.வி.நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி...

பள்ளி மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் பற்று அட்டையை வழங்கும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., ஆட்சியா் துா்காமூா்த்தி.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 55 அரசுப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க