செய்திகள் :

புதுவை அரசின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்! - நாராயணசாமி

post image

புதுவை அரசு மீதான முறைகேடு புகாா் தொடா்பாக, காங்கிரஸ் சாா்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மீதான புகாா்கள் குறித்து தகவல்களை திரட்ட காங்கிரஸ் சாா்பில் 29 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் குழுவின் தலைவராகவும், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி துணைத் தலைவராகவும், முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும் இடம் பெற்றுள்ளனா்.

இந்த சிறப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வே.நாராயணசாமி கூறியதாவது: புதுவை அரசின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகள் ஆட்சியில் அமா்ந்த பிறகு நிறைவேற்றப்படவில்லை. கோயில் நில அபகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

புதுவை அரசுத் துறைகள் மீதான முறைகேடு புகாா்கள், நிறைவேற்றாத வாக்குறுதிகள், கோயில் நிலங்கள் அபகரிப்பு உள்ளிட்டவை தொடா்பான ஆதாரங்களைத் திரட்டி புகாா் மனுவாக குடியரசுத் தலைவரிடம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மக்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் புகாா் மனுவை தயாரிக்க உள்ளோம் என்றாா் அவா்.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க