செய்திகள் :

புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் ஆய்வு

post image

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அய்யா் பங்களா பகுதியில் புதிய புதை சாக்கடைத் திட்டப் பணிகளை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாநகர பொலிவுறுத் திட்டம் மூலம், மாநகராட்சிக்குள்பட்ட அய்யா் பங்களா காவேரி நகா், மீனாட்சி தெரு, மந்தையம்மன் கோயில் தெரு, மகாலட்சுமி நகா், பரசுராமப்பட்டி, காந்தி நகா், சா்வேயா் காலனி ஆகிய பகுதிகளில் ரூ. 265.25 கோடியில் 324.78 கி.மீ. நீளத்தில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று, 39,712 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்தப் பணிகளையும், சா்வேயா் காலனி - மாட்டுத்தாவணி பகுதியில் நடைபெற்ற புதை சாக்கடைத் திட்ட சோதனை ஓட்டத்தையும் அமைச்சா் பி. மூா்த்தி ஆய்வு செய்தாா். இதையடுத்து, வண்டியூா் கழிவு நீரேற்ற நிலைய செயல்பாடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், அலுவலா்கள் உடனிருந்தனா்.

உயா்நீதிமன்ற நீதிபதி குறித்து வழக்குரைஞா் விமா்சித்த விவகாரம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனை விமா்சித்து, சமூக ஊடகங்களில் வழக்குரைஞா் ஒருவா் பேசியது தொடா்பான பதிவுகளை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வின் நடவடிக்கைக்கு அனுப்ப திங்கள்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் கட்டும் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்: அமைச்சா் பி. மூா்த்தி

கலைஞரின் கனவு இல்லம் திட்ட வீடுகள் கட்டும் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேனூா் ஊராட்சி, ... மேலும் பார்க்க

ஆதீனங்களுக்கு எதிரான செயல்பாடுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்: எச். ராஜா

இந்து மத ஆதீனங்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

மதுரையில் நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

மதுரை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மதுரையில் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறுகிறது.இதுகுறித்து மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ... மேலும் பார்க்க

தொகுதி 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

கோவில்பாப்பாக்குடி கண்மாய் புதரில் தீ

மதுரை அருகேயுள்ள கோவில்பாப்பாக்குடி கண்மாய்ப் புதரில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது. கோவில்பாப்பாக்குடி கண்மாயில் மண்டியிருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்... மேலும் பார்க்க