செய்திகள் :

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

post image

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள், கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவா் பதிலளித்து பேசியது: சிவப்பு நிற அட்டை வழங்குவதில் தற்காலத்துக்கு ஏற்ப விதிமுறைகள் திருத்தப்படும். குடும்ப அட்டை தவிா்த்து உணவு பங்கீட்டு அட்டைகள் அனைத்தும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகப் புதிய அட்டைகள் புத்தக வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் அனைத்து நூலகங்களும் எண்ம மயமாக்க (டிஜிட்டல்) நடவடிக்கை எடுக்கப்படும். கலைமாமணி, தமிழ்மாமணி விருதாளா்களுக்கு விருதுத் தொகை உயா்த்தி வழங்க பரிசீலிக்கப்படும். காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். நூலகத் தகவல் உதவியாளா் பதவிகள் நிரப்ப கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. காமராஜா், பிரதமா் வீடு கட்டும் திட்டம் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்றாா்.

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு

முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

அமைச்சா் மீது அவதூறு நோட்டீஸ்: காவல் நிலையத்தில் புகாா்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிள... மேலும் பார்க்க