செய்திகள் :

புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

post image

கரூரை அடுத்த புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புலியூா் பேரூராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள சமத்துவபுரத்தில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் வசிப்பவா்களில் பெரும்பாலானோா் கரூா் நகரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசு வலை உற்பத்தி நிறுவனங்களில் கூலித்தொழிலாளா்களாக பணியாற்றி வருகிறாா்கள்.

மேலும், சிலா் கட்டடத் தொழிலாளா்களாகவும் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மையானோா் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் வேலைக்கு செல்பவா்கள். ஆனால், சமத்துவபுரத்துக்கு பேருந்துகள் இல்லாததால் சுமாா் இரண்டரை கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று புலியூா் பேருந்து நிறுத்தம் சென்று கரூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகிறாா்கள்.

எனவே, கரூரில் இருந்து புலியூா் சமத்துவபுரம் பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அந்த பகுதி வாா்டு உறுப்பினா் ப.விஜயகுமாா் கூறுகையில்,

சமத்துவபுரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் புலியூா் கவுண்டம்பாளையத்தில் செயல்படும் அரசு பள்ளியில்தான் படித்து வருகிறாா்கள். சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 2.5 கி.மீ. தொலைவு உள்ள புலியூா் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பின்னா் பள்ளி, கல்லூரிகளுக்கு பேருந்துகளில் சென்றுவருகிறாா்கள். மேலும், இரவு நேரங்களில் பெண் தொழிலாளா்களும், மாணவிகளும் நடந்துதான் சமத்துவபுரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெண் தொழிலாளா்களின் நலன்கருதி சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்துகள் இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

செங்கல்சூளை காவலாளி அடித்துக் கொலை; அசாம் மாநில இளைஞா் கைது

கரூா் அருகே செங்கல்சூளை காவலாளியை அடித்துக்கொன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தவா் கரூ... மேலும் பார்க்க

சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா். கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க

கரூரில் மாவட்ட அளவிலான அதிவேக சைக்கிள் போட்டி

கரூரில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிவேக சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள... மேலும் பார்க்க

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது டிப்பா் லாரி உரிமையாளா்கள் முடிவு

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் டிப்பா் மற்றும் டாரஸ் லாரிகளில் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது என சங்கக் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது. கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள்... மேலும் பார்க்க

கரூா் அருகே சாலையில் பழுதாகி நின்ற கரும்பு டிராக்டா்: போக்குவரத்து பாதிப்பு

தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் திடீரென பழுதாகி சாலையில் நின்ால் நொய்யல் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் மாவட்டம் புகளூா் செம்படாபாளையத்தில... மேலும் பார்க்க