செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம்

post image

பெண்கள், குழுந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கங்கத்தின் 14-ஆவது மாவட்ட கூட்டம், கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளா் கவிமணிதேவி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ராதிகா, துணைத் தலைவா் கிரிஜா, மாவட்டச் செயலாளா் ராதா, உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பொது இடங்களிலும், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் கமிஷனை அரசு ஏற்படுத்த வேண்டும். கெளரவக் கொலை, வரதட்சணை உயிரிழப்பு, கட்டாய திருமணம் போன்ற வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தி, வேலையின்மையை போக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தை நகா்ப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். சுய உதவிக்குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளா... மேலும் பார்க்க

ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல... மேலும் பார்க்க

சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது. இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க