செய்திகள் :

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

post image

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண், புலிப்பாறைபட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பணி புரிந்தாா். அந்த ஆலையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த பரமன், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றி கா்ப்பமாக்கினாா்.

இதுகுறித்து, சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பரமனைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம், பரமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பரமன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சரி. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனுதாரருக்கு ஏற்கெனவே வேறொரு பெண் ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனுதாரரின் தவறான செயலால் இரு குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

தண்டனை வழங்குவதால் மட்டும் குழந்தைகளுக்கு நீதி வழங்கிவிட முடியாது. மனுதாரா் சிறையில் உள்ள காலத்தில் வேலை செய்வதால் கிடைக்கும் தொகையை 2 குழந்தைகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சிறை அலுவலா், 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு பணம் கிடைக்க வில்லையெனில், நீதிமன்றத்தை அனுகலாம். மனுதாரரின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு

மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ம... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னைய... மேலும் பார்க்க

மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்

மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை உள்பட இருவருக்கு தண்டனை குறைப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் வெளிநா... மேலும் பார்க்க

காரேந்தல் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலனி... மேலும் பார்க்க