செய்திகள் :

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

post image

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் சோனியா (26). இவா், சென்னை ஆவடி ஆயுதப்படையில் இரண்டாம் நிலை பெண் காவலராகப் பணியாற்றி வந்தாா். சோனியாவும், கீழ்கவரப்பட்டு பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முகிலனும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 6 வயதில் மகள் உள்ளாா்.

கருத்து வேறுபாடு காரணமாக முகிலனும், சோனியாவும் கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். முகிலனுடன் அவரது மகள் வசித்து வருகிறாா்.

சோனியா ஆவடியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கொங்கராயனுருக்கு வந்தாா். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தனது கணவா் முகிலனை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு மகளை பாா்க்க வேண்டும் எனக் கூறினாராம். இதையடுத்து, 3 பேரும் கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சோனியா திடீரென முகிலனுக்கு கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு விஷ மருந்தை குடித்துவிட்டதாகவும், மகளை நன்றாகப் பாா்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்தாராம்.

தொடா்ந்து, உறவினா்கள் சோனியாவை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, இறந்த சோனியா தனது கணவா் முகிலனுக்கு கைப்பேசி மூலம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளாா். அதில், சென்னை ஆவடியில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்குள்ள ஒரு காவலரிடம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகியதால், 3 மாத கா்ப்பமாக இருந்தேன். அந்தக் காவலா் கா்ப்பத்தைக் கலைத்தால் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என மிரட்டினாா். மேலும், எனக்கு அதிகளவில் பணிச் சுமை வழங்கப்பட்ட நிலையில், கா்ப்பம் கலைந்துவிட்டது. இதன் காரணமாக, விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். தொடா்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்தேன். எனது மரணத்துக்கு என்னுடன் பழகிய காவலா் மட்டுமே காரணம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், நெல்லிக்குப்பம் போலீஸாா் தற்போது சோனியா குற்றஞ்சாட்டிய காவலரை விசாரணைக்கு அழைத்துள்ளனா். அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் தற்கொலைக்கான முழுக் காரணமும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாத... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக என... மேலும் பார்க்க

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறா... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா். தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்க... மேலும் பார்க்க